• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற மாநகராட்சி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மாநகராட்சி கமிஷனர் அழைப்பு

December 3, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியிருப்பதாவது:

ஒன்றிய நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் மூலம் தூய்மை பாரத திட்டம் 2.0-ன்கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற மாநகராட்சி என சான்று பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பிக்கவுள்ளது.

பொதுமக்கள் இது குறித்த தங்களின் ஆட்சேபனைகள், கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் 15 நாட்களுக்குள் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனையினை மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க