• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரையரங்குகளில் மாநகராட்சி துணை கமிஷனர் ஆய்வு

April 10, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சினிமா திரையரங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி ஆய்வு மேற்கொண்டார். அப்போது 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே படம் பார்க்க வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா? என பார்வையிட்டார்.

பின்னர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை ஆய்வு மேற்கொண்ட அவர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் முகக்கவசம் அணியாமல் இருந்த 27 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து உத்திரவிட்டார். அதே போல் துடியலூரில் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து சத்தி சாலையில் செயல்பட்டுவரும் தனியார் மாலில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து,சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா? மாலிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்பமானியைக் கொண்டு வெப்ப அளவு பரிசோதனை செய்யப்படுகின்றதா? எனவும் மாலில் செயல்பட்டுவரும் திரையரங்கத்திற்கு சென்று பொதுமக்கள்முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா? எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது நகர்நல அலுவலர் ராஜா, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க