January 2, 2019 தண்டோரா குழு
திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இதற்கிடையில், இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாகுல் அமீது போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.