December 31, 2018
தண்டோரா குழு
திருவாரூர் இடைத்தேர்தலால் கஜா புயல் நிவாணரப் பணிகளுக்கு எந்த விதமான தடையும் இல்லை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான 2016 சட்டபேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டிட்டு வெற்றிபெற்றார். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு ஜன.,28ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜன.,3ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் ஜன., 10. மனுக்கள் மீதான பரிசீலனை ஜன.,11ம் தேதி துவங்குகிறது. மனுக்களை திருப்பி பெற கடைசி நாள் ஜன., 14. ஓட்டு எண்ணிக்கை ஜன.,31ம் தேதி நடைபெறும். இதனிடையே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்புபை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில்.தமிழகத்தில் கஜா புயல் நிவாரணம் இன்னும் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சூழலில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் நிவாரண உதவியில் பாதிப்போ, தடையோ ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது. இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ விளக்கமளித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்; ஏற்கனவே அறிவித்த கஜா நிவாரணப் பணிகளுக்கு தடையில்லை வங்கிக் கணக்கில் நேரடியாக நிவாரணத்தை வரவு வைக்கும் திட்டம் தொடரலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ கூறியுள்ளார்.