• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து – உயர் நீதிமன்றம்

September 19, 2017 தண்டோரா குழு

திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முள்ளி வாய்க்காலில் மே 17ம் தேதி லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நினைவேந்தல் நடத்தும் விதமாக சென்னை மெரீனாவில் தடையை மீறி மே 17 இயக்கம் நினைவேந்தல் நடத்தியது.இதனால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது குண்டர் சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உட்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்ய உத்தரவிட்டது.

மேலும் படிக்க