• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமைகளாக மாற்றுகிறது தமிழ் சமுதாயம் – இயக்குநர் மு.களஞ்சியம்

November 10, 2017 தண்டோரா குழு

திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமைகளாக மாற்றுகிறது தமிழ் சமுதாயம் என திரைப்படஇயக்குநர் மு.களஞ்சியம் கூறியுள்ளார்.

கோவில்பட்டியை சேர்ந்த சங்கரநாரயணன் – கோமதி தம்பதியின் மகன் வைரமயில். இவர் கோவில்பட்டியில் பள்ளி மற்றும் டிப்ளமோ படிப்பினை முடித்து, ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ முடித்துள்ளார். அதன் பின்பு தன மேற்படிப்புக்காக ஸ்வீடன் நாட்டிற்கு சென்ற அவர் அங்கு தனது மேற்படிப்பினை முடித்த பின்பு அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

தமிழ் மொழி மற்றும் கலைகளில் ஆர்வம் கொண்ட வைரமயில் சல்சா நடனம் பயில சென்றுள்ள போது ஜெர்மனியை சேர்ந்த பீட்ரிச்சை சந்திதுள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி பின்னர் அது காதல் மலர்ந்துள்ளது. கடந்த 1 வருடமாக காதலித்த இருவரும் தங்கள் காதலை பெற்றோர்களிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் பெற்று இருவரின் திருமணம் இன்று கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதலில் தமிழ்முறைப்படி, மேளதாளம் முழங்க திருமணம் நடைபெற்றது.பின்னர் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.இந்த திருமணத்தினை திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் நடத்தி வைத்தார்.

பின்னர் இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது,

தமிழ் இளைஞர்கள்,பெண்கள்,தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முன்வர வேண்டும். பெண்களை தமிழ் சமுதாயம் அடிமைகளாக மாற்றுகிறது. காதல் மற்றும் தமிழ் முறைப்படியான திருமணங்களால் மட்டும் தான் முடியும். இத்தகைய திருமணங்கள் தான் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும், பெண்களுக்க சம உரிமை கொடுத்தால் தான் வீட்டு நிர்வாகமும், நாட்டு நிர்வாகம் நன்றாக இருக்கும் என்றார்.இத்திருமண நிகழ்ச்சியில் வைரமயில் உறவினர்கள், மற்றும் பீட்ரிச் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க