• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருமணக் கொண்டாட்டத்தில் உயிரிழந்த மணமகன்

May 13, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் திருமண கொண்டாட்டத்தின் போது, திடீரென மணமகன் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ரனோலி கிராமத்தை சேர்ந்தவர் சாகர் சோலங்கி. இவருக்கு வெள்ளியன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், வியாழன்று திருமண கொண்டாட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோலங்கி, ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சோலங்கி மயங்கி விழுந்துள்ளார். இதையெடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சோலங்கி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் திடீரென உயிரிழந்த சம்பவம் இரு வீட்டாரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த காட்சி முழுவதும் வீடியோவாக படமெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க