• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூர் மாநகராட்சியை கண்டித்து திமுகவினர் ஆர்பாட்டம்

October 4, 2017 தண்டோரா குழு

திருப்பூரில் மாநகராட்சி நிர்வாக சீர் கேட்டை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம் சீரான முறையில் விநியோகிக்காததை கண்டித்தும், தெருவிளக்கு வசதி,சாக்கடை வசதி, மேலும் நாட்கணக்கில் சுத்தம் செய்யப்படாத சாக்கடைகளினால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவுவதை கண்டித்தும் இன்று திமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் முதலாம் அலுவலகம் அமைந்துள்ள வேலம்பாளையம் காந்தி நகர் பேருந்து நிலையம் அருகே இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழகச்செயலாளரும் முன்னாள் மேயருமான க. செல்வராஜ் உள்பட நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிராக கோக்ஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க