திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியரை மர்ம நபர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் குமரன் ரோடு அருகே உள்ள பின்னி காம்பவுண்ட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக ரோட்டோரத்தில் கிளி ஜோசியம் பார்த்து வந்தவர் ரமேஷ் என்கிற குமார். இன்று மதியம் ரமேஷ் அங்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு நபர், சரமாறியாக வெட்டினார். இந்த சம்பவத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு அந்த நபர், துண்டறிக்கை ஒன்றை அங்கிருந்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளார். அதில், ஜோதிடம் பார்க்க வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும் குடும்ப வறுமையில் வரும் பெண்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாகவும் எழுதப்பட்டிருந்தது. மேலும், இதில் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இ்ந்த விஷயத்தில் முறையான விசாரணை நடத்தி, ஜோசியருக்கு பின்னால் இருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிக்கு இவனால் பாதிக்கப்பட்டவன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருப்பூரில் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இச்சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வடகோவை சிந்தாமணி சந்திப்பில் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு!
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றத்தை வழிநடத்தும் பிராண்டாக அடிசியா தொடர்ந்து பயணிக்கும் – மணிகண்டன்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை