• Download mobile app
25 Jul 2025, FridayEdition - 3453
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை

December 24, 2018 தண்டோரா குழு

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியரை மர்ம நபர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் குமரன் ரோடு அருகே உள்ள பின்னி காம்பவுண்ட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக ரோட்டோரத்தில் கிளி ஜோசியம் பார்த்து வந்தவர் ரமேஷ் என்கிற குமார். இன்று மதியம் ரமேஷ் அங்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு நபர், சரமாறியாக வெட்டினார். இந்த சம்பவத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு அந்த நபர், துண்டறிக்கை ஒன்றை அங்கிருந்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளார். அதில், ஜோதிடம் பார்க்க வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும் குடும்ப வறுமையில் வரும் பெண்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாகவும் எழுதப்பட்டிருந்தது. மேலும், இதில் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இ்ந்த விஷயத்தில் முறையான விசாரணை நடத்தி, ஜோசியருக்கு பின்னால் இருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிக்கு இவனால் பாதிக்கப்பட்டவன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருப்பூரில் பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இச்சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க