• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தாலிக்கொடியை கழட்டி எறிந்து பெண்கள் போராட்டம்

January 7, 2019 தண்டோரா குழு

திருப்பூரில் மீண்டும் அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை கழட்டி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வந்தது. நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து இந்த மதுக்கடை அகற்றப்பட்டது. இதையடுத்து அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை மீண்டும் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த டாஸ்மாக் கடையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகினர். இதையடுத்து, இந்த கடையை அகற்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், மாவட்ட நிர்வாகம் அந்த மதுபானக்கடையை அகற்றியது.

இந்நிலையில் அகற்றப்பட்ட மதுக்கடையை மீண்டும் அதே பகுதியில் பகுதியில் திறக்க டாஸ்மாக் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதனால் மீண்டும் இங்கு மதுக்கடையை திறக்கபட்டால் இப்பகுதி மக்கள் பெரும் இடையூறாக இருக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் தங்கள் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை கழட்டி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் படிக்க