June 24, 2020 தண்டோரா குழு
22 வயதான ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 15-ம் தேதி இவர் சொந்த ஊர் சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து,இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து இவர் கடந்த 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து ஒரு வார காலமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இளம் வயது ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.