• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

திருப்பூரில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் – மாவட்ட ஆட்சியர்

May 5, 2020 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்திரவு அமல்படுத்தப்பட்டத்தில் இருந்து நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.டெல்லி,ஆந்திர,கர்நாடக மாநிலங்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்துள்ளன.இதற்கிடையில்,
தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.எனினும் தமிழக அரசு மதுக்கடைக்கு வருபவர்கள் முகம்கவசம் அணிய வேண்டும், தனி மனித விலகலை கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன்
அறிவித்துள்ளார்.மேலும்,டாஸ்மாக் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் கையுறை அணிய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க