February 10, 2019
திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
திருப்பூரில் இன்று நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உற்சாக வரவேற்பு அளித்தார். இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மோடி திருப்பூர் சென்றார்.
திருப்பூரில் அமையவுள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய, பிரதமர் நரேந்திர மோடி, சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை நாட்டிற்கு அற்பணித்தார். அதை தொடர்ந்து, சென்னை, டி.எம்.எஸ்., – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்,
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.