• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரின் புதிய காவல் ஆணையர் பெறுப்பேற்பு !

July 3, 2020 தண்டோரா குழு

திருப்பூர் மாநகர் பகுதியின் புதிய காவல் ஆணையராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த சஞ்சய்குமார் பணி மாறுதல் ஆகி வேறு பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து,திருப்பூர் மாநகர் பகுதியின் புதிய காவல் ஆணையராக கார்த்திகேயன் இன்றுபொறுப்பேற்றுக்கொண்டார்

இதற்கு முன்பாக இவர் கோவை சரக டி.ஐ.ஜி ஆக இருந்தார். தற்போது ஐ.ஜி ஆக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னதாக அவிநாசி பகுதி டிஎஸ்பி ஆகவும் , ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் எஸ்பி பதவியையும் வகித்து வந்த கார்த்திகேயன் தற்பொழுது காவல் ஆணையராக பதவி ஏற்றுள்ளார்.

பதவியேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் கார்த்திகேயன,

திருப்பூர் மாநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் முக்கிய பணியாற்றுவார்கள் என்று கூறினார். இவை தவிர திருப்பூர் மாநகர் பகுதிகளில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்கும் குற்றச்செயல்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க