• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தகுதியில்லாதவர்களுக்கு கல்விக் கடன் கொடுக்க வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

June 28, 2018 தண்டோரா குழு

கடனை திருப்பிச் செலுத்த தகுதியில்லாத பெற்றோருக்கு கல்விக் கடனை கொடுக்க வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு கல்விக் கடன் அளிக்க வங்கி மறுப்பதாக கூறி தீபிகா என்ற நர்சிங் மாணவி வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, தீபிகாவின் தந்தை ஏற்கனவே மற்றொரு பிள்ளைக்காக கல்விக்கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.

மேலும்,கடனை திருப்பிச் செலுத்த இயலாத பெற்றோருக்கு கல்விக் கடனை மறுக்கலாம்.அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிர்பந்தங்களால் கடன் வழங்குவதில் மக்கள் பணம் வீணாகிறது.மாணவர்களுக்கு வழங்கப்படும் கடனை பெற்றோரால் திரும்ப செலுத்த இயலுமா என்பதை ஆராய வங்கிகளுக்கு உரிமை உண்டு.கடன் என்பது சிறியதோ,பெரியதோ அதனை வாங்குபவரிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தகுதியை ஆராய்தல் சரியான முடிவாகும்.

கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுபவர்கள் பின்னால் அலைவதை விட முன்கூட்டியே யாருக்கு வழங்கலாம் என முடிவு செய்து வழங்குதல் சரியான செயலாகும்.அழுத்தங்களால் வங்கிகள் கடன் கொடுக்கும் போது பொதுமக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதோடு,வாங்குபவர் நாட்டை விட்டு சென்று விடுவதும் நடக்கிறது என நீதிபதி கூறியுள்ளார்.இதையடுத்து,வங்கி விதிகளின் படி நர்சிங் மாணவர்களுக்கு கடன் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க