• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருநங்கை கொலை வழக்கில் கைதான பிரியாணி மாஸ்டர் பரபரப்பு வாக்குமூலம்

October 23, 2020 தண்டோரா குழு

கோவையில் திருநங்கை சங்கீதாவை கொலை வழக்கில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சாய்பாபா காலனியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா.இவர் திருநங்கைகள் நல்வாழ்விற்காக தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கினார். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சங்கீதா உடலில் வெட்டு காயங்களுடன் தண்ணீர் ட்ரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய சாய்பாபா காலனி போலீசார் அவரது கொலை குறித்து விசாரணையை தொடங்கினர். மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.இந்நிலையில் திருநங்கை சங்கீதாவை கொலை செய்த ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சங்கீதா வீட்டிலேயே தங்கி டிரான்ஸ் கிச்சனில் பிரியாணி மாஸ்டராக வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையில்,
திருநங்கை சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டித்த திருநங்கை சங்கீதா, போலீசில் கூற முயன்றதால் அவரை கழுத்தறுத்து கொன்றதாகவும் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க