January 3, 2020
கோவை மரக்கடை நவாப் ஹக்கீம் சாலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மரக்கடை சந்திப்பில் தொடங்கி வெரைடி ஹால் வரைக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்குபெற்றனர். சாலையில் இருபுறமும் கைகோர்த்து No CAA – No NRC என்ற முழக்கங்கள் எழுப்பினார். மேலும் 100 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை பிடித்தும் மற்றும் கையில் கொடி ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது. மதியம் இறை தொழுகை முடித்துவிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்திய அரசு உடனடியாக மசோதவை திரும்பபெற வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் நகரின் முக்கிய பகுதி என்பதால் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக சீர் செய்தனர்.