கோவை மாநகராட்சியின் குடிநீர் பராமரிப்பு பணியை பிரான்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து திமுக சார்பில் வரும் ஜூலை 6ம் தேதி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவையில் கருணாநிதியின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ கார்த்திக் கூறுகையில்,
கோவை மாநகராட்சி பகுதியில் 24 மணிநேரமும் குடிநீர் வழங்க 2008ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது,மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான திட்ட வரையறைகள் தயார் செய்யப்பட்டது.இதற்கான மத்திய – மாநில அரசுகளிடம் நிதி பெற 2011 ஜனவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பிறகு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 8 வருட கால தாமதத்திற்கு பிறகு,24 மணிநேர குடிநீர் வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,குடிநீர் வழங்குவதற்காக பிரான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு பராமரிப்பு பணிகளை கொடுத்துள்ளனர்.இதன் மூலம்,ஒரு வருடம் அவர்கள் திட்டமிடவும்,4 ஆண்டுகள் அதற்கான பணிகளை மேற்கொள்ளவும்,21 ஆண்டுகள் பராமரிப்பிற்காகவும்,மொத்தம் 26 ஆண்டுகள் பணிக்காக 3150 கோடியை வழங்கியுள்ளனர்.இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு திமுக செயல்தலைவரும்,எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநகராட்சியையும்,அரசையும் கண்டித்து கண்டன அறிக்கை வெளிட்டுள்ளார்.இதுதொடர்பாக சட்டமன்றத்தில் திமுக செயல் தலைவரின் ஆலோசனையின் பேரில்,சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததாக தெரிவித்தவர்,இது தொடர்பான கேள்விகளுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளிக்கவில்லை.
ஒரு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றால்,அதன் மதிப்பிற்கு தகுந்தவாறு விவாதித்து அனுமதி பெற வேண்டும் என்பது மரபு.இதற்கிடையே மாநகராட்சியினுள் சிங்காநல்லூர்,கோவை வடக்கு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகளும்,கவுண்டம்பாளையம் தொகுதியில் ஒரு சில பகுதிகளும் உள்ளடங்கியுள்ளது.இப்படி இருக்க சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் கூட அனுமதி பெறவில்லை.
மேலும்,தனியாருக்கு வழங்கிய மாநகராட்சி நிர்வாகம்,உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 6ம் தேதி,கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு