• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ்

September 1, 2017 தண்டோரா குழு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற விவகாரத்தில் சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, தங்கதமிழ்செல்வன் மற்றும் ஏழுமலை ஆகியோர் நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 30) சட்டசபை செயலரை சந்தித்து விளக்கம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், செப்., 5 க்குள் முழுமையாக விளக்கத்தை அளிக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அளித்த விளக்கத்தை இடைக்கால பதிலாகவே கருதப்படும் எனக்கூறியுள்ளார்.

மேலும் படிக்க