• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

March 17, 2018 தண்டோரா குழு

டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார், மேலும் அரசியலில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 15ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி  தினகரன் தனது அமைப்பிற்கான பெயரையும், கொடியையும் அறிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் திராவிடம் இல்லை என்று கூறி பொதுக்கூட்டத்தை புறக்கணித்தார் நாஞ்சில் சம்பத்.  பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பங்கேற்காதது அப்போது பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், நாஞ்சில் சம்பத் இன்று  வெளியிட்ட அறிக்கையில்,

டிடிவி தினகரன் அறிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற  பெயரில் தனக்கு உடன்பாடு இல்லை. அண்ணாவும் , திராவிடமும் இல்லாத  டிடிவி  அணியில் நீடிக்க விரும்பவில்லை.நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை. இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க