• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரனுக்கு குக்கர் சின்னம்,பெயர் ஒதுக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மதுசூதனன் மனுதாக்கல்

March 19, 2018

தினகரன் அணிக்கு குக்கர் சின்னம், கட்சி பெயர் ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து,மதுசூதனன்,செம்மலை மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், ள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில்,டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுசூதனன்,செம்மலை ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.இவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

மேலும் படிக்க