March 14, 2018
தண்டோரா குழு
டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் தரப்பட்டதை எதிர்த்தும் கட்சிக்கு புதிய பெயர் ஒதுக்கீடு செய்வதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், தனது அணிக்கு டிடிவி தினகரன் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. அதில், தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும் கட்சி பெயரையும் உயர்நீதிமன்றம் ஒதுக்கியது, தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிரானது என முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.