• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு சீறி பாய்ந்த காளைகள்

February 4, 2017 தண்டோரா குழு

திண்டுக்கல் அருகே உள்ள உலகம்பட்டி பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடைபெறும் இந்நிகழ்ச்சி தடை காரணமாக கடந்த மூன்று வருடமாக நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதையடுத்து அதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவில் காளைகளுக்குப் பாரம்பரிய முறைப்படி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன. வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பிடித்தனர். காளைகளைப் பிடித்த வீரர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க