January 28, 2019 தண்டோரா குழு
திட்டமிட்டபடி பிப்ரவரி 1ஆம் தேதி செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் போராட்டத்தால் தேர்வுப் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது தேர்வுத்துறை இயக்குநர்
வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.
9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அலுவர்களை மீண்டும் பணிக்கு அனுப்ப ஏராளமான முயற்சிகளை எடுத்து வருக்கிறது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது.
மேலும் பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலையும் இருந்து வருகிறது. இதனால் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏலரமனோர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் 90 சதவிகிதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் அளித்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 80 சதவிகிதம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றும், தற்காலிக ஆசிரியர் பணிக்காக ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
இதனையேடுத்து தேர்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை முதல் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வுத்துறை பணியாளர்களின் போராட்டத்தால் தேர்வுப் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார்.