• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தள்ளுவண்டி கடையில் கத்தியை காட்டி மிரட்டிய சிறுவன் கைது

July 15, 2023 தண்டோரா குழு

கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா(28). இவர் அப்பகுதியில் தள்ளுவண்டி கடையில் இட்லி, தோசை போன்ற உணவு வழங்கும் டிபன் செண்டர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கோவை நேரு நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் (15) சாப்பிட வந்துள்ளார்.

அப்போது சாப்பிட்டு விட்டு பணம் தராமல் இளையராஜாவிடம் ரூ.300 வேண்டும் என கத்தியை காட்டி மிரட்டினார். உடனே இளையராஜா சத்தம் போட்டு அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை உதவிக்கு அழைத்தார். ஆட்டோ ஒட்டுநர்கள், அருகில் உள்ளவர்கள் உடனே ஓடி வந்து அச்சிறுவனை பிடித்து பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க