• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைமறைவாக இருந்து வந்த வழிப்பறி கொள்ளையனின் கூட்டாளி அதிரடி கைது

April 25, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் குஷ்பூ வசித்து வருகிறார். கடந்த மார்ச் 21ம் தேதி அன்று அவர் வீட்டில் கேட்டினை திறக்கும் போது அவரது கழுத்தில் இருந்த 4½ பவுன் தங்க செயினை அடையாளம் தெரியாத 2 நபர்கள் திருடி சென்றனர்.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குஷ்பு துடியலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய ஜெகநாதன் என்ற நபரை காவல் துறையினர் கைது செய்து திருடிய தங்க நகையை கைப்பற்றினார்கள்.

இதனிடையே இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொருவரான சரவணனை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் சரவணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தனிப்படை காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

மேலும் படிக்க