• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைகவசம் அணியாத 474 நபர்கள் மீது வழக்கு பதிவு

March 17, 2023 தண்டோரா குழு

கோவை மாநகரத்தை “விபத்தில்லா கோவையாக ” உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி கோவை மாநகரில் ரத்தினம் காலேஜ் பொள்ளாச்சி ரோடு, கிருஷ்ணா காலேஜ் பாலக்காடு ரோடு, பேரூர் பைபாஸ் ரோடு ஜங்ஷன், சீ-3 சாய்பாபா காவல் நிலையம் முன்பு, மருதமலை ரோடு அக்ரி 7-வது கேட், அவிநாசி ரோடு சின்னியம்பாளையம் ஐங்ஷன், காளப்பட்டி ரோடு நேரு நகர் பஸ் ஸ்டாப், கொடிசியா ஜங்ஷன், சத்தி ரோடு அத்திபாளையம் பிரிவு சிக்னல், சரவணம்பட்டி – தூடியலூர் ரோடு உள்ளிட்ட 10 இடங்களில் சிறப்பு வாகன தனிக்கை முகாம் நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 596 இருசக்கர வாகன ஓட்டிகளில், 474 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, 122 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், 1010 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் உள்ள பயிற்சி மையத்தின் மூலமும், விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும், தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 414 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க