• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு நீதிமன்றம்நோட்டீஸ் !

May 22, 2017 தண்டோரா குழு

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் விடுதலையை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில், அவர்கள் சி.பி.ஜ.-க்கு விளக்கம் அளிக்ககோரி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சன் குழுமத்தை சார்ந்த கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இருவரையும் விடுவித்தது தீர்ப்பளித்தது.

இதனிடையே சிறப்பு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து, சி.பி.ஐ.தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வரும் ஆகஸ்டு 29- ம் தேதிக்குள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் சி.பி.ஐ.க்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க