• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும் பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தல்

June 4, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாட்டு மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிற நிலையில் தேவைக்கேற்ப மத்திய அரசு தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. உடனயாக தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட எண்ணிக்கையை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுபபினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார்.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை கோவை மாவட்டத்தில் தீவிரமாக பரவி வந்தது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 20 நாட்களுக்குள் கோவை மாவட்டத்திற்கு இரண்டு முறை பயணம் செய்து பணிகளை முடுக்கிவிட்டார்.

இதேபோன்று உணவுத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் கோவை மாவட்டத்திலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்குவதும். பொதுமக்களிடம் இருந்து வருகிற கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பது உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இதன்ஒருபகுதியாக வெள்ளியன்று கோவை சித்தாபுதூர், மசக்காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

மேலும் அங்கு பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகமூட்டினார்.

முன்னதாக அவர் கூறுகையில்,

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தை காட்டி வருகின்றனர். எங்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோவை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் கூட நடைபெறும் வகையில் தடுப்பூசி செலுத்த மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு தர மறுக்கிறது. தமிழகத்தை காட்டிலும் குறைவான மக்கள் தொகை குறைவாக உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வழங்குகிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு குறைந்த அளவே தடுப்பூசி வழங்குகிறது. மாநில அரசின் தடுப்பூசிகள்தான் இப்போது செலுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து பாரபட்சத்தோடு நடக்கிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவோம் என பிரதமர் தம்பட்டம் அடித்தால் மட்டும் போதாது. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மாநில திமுக அரசை குறைகூறுவதை விடுத்து மத்திய அரசிடம் நமது தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் சார்பில் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு ஆயிரம் பாட்டில் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர.நடராஜன் துவக்கிவைத்தார்.

எச்எம்எஸ் சங்கத்தின் தலைவர் ராஜமாணி முன்னிலை வகித்தார். இதில் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன்,, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூரத்தி, செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க