• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்

November 7, 2017 தண்டோரா குழு

தமிழறிஞர் மா.நன்னன் உடல்நலக்குறைவால் சென்னை சைதாப்பேட்டை உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

1924ல் ஜூலை 30ம் தேதி கடலூர் மாவட்டம் சத்துக்குடலில் பிறந்தவர் மா.நன்னனின் இயற்பெயர் திருஞானசம்பந்தன்.திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவராக இருந்தார் தமிழறிஞர் மா.நன்னன்.

மேலும்,வெள்ளையனே வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்ற இவர் தமிழ் கட்டுரை, பாட நூல்கள் உள்ளிட்ட சுமார் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராக பணியாற்றிய இவர்,எழுத்தறிவித்தலில் நன்னன் முறை என்ற புதிய முறையை உருவாக்கினர்.

மாநில கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய நன்னன் தமிழ்ச் செம்மல் விருது, பெரியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

பெரியார் கொள்கைகளின் மீது பற்றுக் கொண்ட இவர் பெரியார் கொள்கைகள் குறித்து பல நுல்களை எழுதியுள்ளார்.இவர் எழுதிய “பெரியாரைக் கேளுங்கள்” என்னும் நூல் தமிழ் வளர்ச்சித்துறையின் 2009ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது.

மா.நன்னன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

மேலும் படிக்க