• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களியுங்கள் – சுப்பிரமணியன் சுவாமி டுவீட்

December 18, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் மருதுகனேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன் சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர்.இதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுகவுக்கும் – டிடிவி. தினகரனுக்கும் இடையேதான் நேரடியான போட்டி இருப்பதாக பாஜகவின் செயற்பாட்டாளர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். எனவே, தமிழர்கள் டிடிவி.தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க