• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக முதல்வருக்கு கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நன்றி

June 4, 2021 தண்டோரா குழு

தொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு அனுமதி அளித்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போசியா சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் உள்துறை, தொழில் துறை அமைச்சர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் சர்வதேச வாணிப அபிவிருத்தி துறை தொழிற்சாலைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை மீண்டும் தொடங்க சிபாரிசு செய்தது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் தொழிற்சாலைகளுக்கு, குறிப்பாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்ய அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து கோவையில் அத்யாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மீண்டும் ஆக்ஸிஜன் சிலிண்’டர் விநியோகம் தொடங்கியுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் சிறு,குறு தொழில்களின் தேவையை கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க