• Download mobile app
11 May 2026, MondayEdition - 3743
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

1௦ தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

February 7, 2017 தண்டோரா குழு

இலங்கையின் நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 1௦ மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இது குறித்து மீன்வளத் துறை துணை இயக்குநர் கொளஞ்சிநாதன் கூறுகையில்,

“நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 1௦ மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதோடு அவர்களிடம் இருந்த மீன் வலைகள் மற்றும் உபகரணங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்தவர்கள். தற்போது அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்” என்றார்.

இதைப்போல் பிப்ரவரி 1ம் தேதி, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கை கடற்படையினரால் மீனவர்களுக்கு நேரும் இந்த பிரச்சினையால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பிடிக்கப்பட்ட 25 மீனவர்கள் மற்றும் 119 படகுகளை இலங்கை காவலில் இருந்து விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிப்ரவரி 2ம் தேதி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க