May 20, 2019 தண்டோரா குழு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூவின் அலுவலகம் உள்ளது. இங்கு இன்று தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், குண்டு வெடிக்கும் என மொட்டைக் கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரி அறையில் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து தலைமை செயலகத்தை சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.