February 27, 2019
தண்டோரா குழு
தமிழக – கேரள எல்லையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு காட்டு யானைகளை சுட்டு கொன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தமிழக – கேரள எல்லையான பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மணலியம்பாடம் வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு காட்டு யானைகள் இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு அப்பகுதி கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜபீர், மற்றும் பிஜூ என்ற இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் பணத்திற்காக யானைகளை சுட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.