• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக ஆளுநரை தம்பிதுரை, ஜெயக்குமார் சந்தித்தனர்

April 20, 2017 தண்டோரா குழு

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று சந்தித்தனர்.

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து, தம்பிதுரை மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநரிடம் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக.,வின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த சூழலில் ஆளுநர் உடனான இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில்,

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்தும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஓ.பி.எஸ் அணிக்கு அந்த அமைச்சர் பதவி வழக்கப்படுவது குறித்தும் ஆளுநரிடம் பேசியிருக்கலாம்,” என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீன்வளப் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் அவரை சந்தித்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க