• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு மருத்துவர் சங்கம் நடத்திய போராட்டம் வாபஸ்

May 5, 2017 தண்டோரா குழு

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, மீண்டும் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவர்கள் கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், போராட்டத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்புமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறி இருந்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையில் நோயாளிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக மருத்துவ மாணவர்கள் கூறியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் படிக்க