ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மைதானம் என்ற அடிப்படையில் விளையாட்டு மைதானங்களை உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விளையாட்டு மைதானங்களை தனியார் பங்களிப்போடு உருவாக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு மைதானத்திற்கும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வீரர் வீராங்கனைகள் விளையாட்டு மைதானத்திலே தங்கி முழு பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,30 தனியார் கல்லூரிகள் மூலமாக ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தொழில்துறைக்கான ஆட்டோமேஷன்தொழில்நுட்ப நவீனமயமாக்கலுக்கு புதிய ஸ்மார்ட் தீர்வுகள்: லாரிட்ஸ் நுட்சன் எலக்ட்ரிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் அறிமுகம்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி