• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக அரசு திட்டம்

March 5, 2019 தண்டோரா குழு

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மைதானம் என்ற அடிப்படையில் விளையாட்டு மைதானங்களை உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விளையாட்டு மைதானங்களை தனியார் பங்களிப்போடு உருவாக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழக மாணவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு மைதானத்திற்கும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வீரர் வீராங்கனைகள் விளையாட்டு மைதானத்திலே தங்கி முழு பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,30 தனியார் கல்லூரிகள் மூலமாக ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க