• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படை தயார் நிலையில் ஏன் டிஜிபி விளக்கம்

September 26, 2017 தண்டோரா குழு

அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பாக அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வநதுள்ளார். தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் முக்கிய சம்பவம் ஏதேனும் நிகழபோகிறதா என சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின.இதனிடையே, சிறப்பு காவல்படை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு வழக்கமானது தான் என்றும் இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் டிஜிபி ராஜேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க