• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படை தயார் நிலையில் ஏன் டிஜிபி விளக்கம்

September 26, 2017 தண்டோரா குழு

அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பாக அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வநதுள்ளார். தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் முக்கிய சம்பவம் ஏதேனும் நிகழபோகிறதா என சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின.இதனிடையே, சிறப்பு காவல்படை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு வழக்கமானது தான் என்றும் இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் டிஜிபி ராஜேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

மேலும் படிக்க