• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரம் அரசு மையங்களில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

September 20, 2020 தண்டோரா குழு

அடுத்த மாதம் ஒண்பதாம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரம் அரசு மையங்களில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த அரசு பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக அரசு பணியாளர் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் பாலசுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழ்நாடு அரசு பணியாளர்களின் நிரந்தர கோரிக்கைகளை தற்போது ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றால் நிறுத்தி வைத்துள்ளது. இருந்த போதும் கொரோனா தொற்று தொடர்பாக மக்களோடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டு வரும்,காவல் துறையினர், சுகாதார துறையினர்,மற்றும் துப்புரவு தொடர்பான பணிகள் மற்றும் டாஸ்மாக்,ரேஷன் கடை ஊழியர்கள் என மக்களோடு தொடர்புடைய அரசு பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இழப்பீடு தொகையான ரூபாய் இருபத்தைந்து இலட்சம் கிடைக்கும் வகையில் மருத்துவ குழு காப்பீட்டு திட்டத்தை அரசு நடைமுறைத்த வேண்டும், ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும்,உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் அஞ்சல் அட்டை இயக்கம் இந்த மாதம் முழுவதும் நடைபெறும் எனவும்,அடுத்த கட்டமாக அடுத்த மாதம் ஒண்பதாம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரம் அரசு மையங்களில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த அரசு பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க