• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

June 8, 2017 தண்டோரா குழு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் காற்றுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த வருடம் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க