May 11, 2020 தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று மேலும் 798 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 514, பெண்கள் 284.சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 538 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் தமிழகத்தில் 5,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் பலியாகியுள்ளனர்.இதைத்தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 92 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது.இன்று மட்டும் மொத்தம் 11,584 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,43,952 ஆக உயர்ந்துள்ளது.
.