• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்க திட்டம் – 5 கே கார் கேர் மையத்தின் நிறுவனர் பேட்டி !

March 26, 2021 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்க திட்டம் 5 கே கார் கேர் மையத்தின் நிறுவனர் கார்த்திக் சின்ராஜ் கூறியுள்ளார்.

கோவை துடியலூர் 5கே கார் கேர் மையத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழா மைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 5 கே கார் கேர் மையத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கார்த்திக் சின்ராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்,

துடியலூர் 5 கே கார் கேர் மையம் இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக வாடிக்கையாளருக்கு சேவையாற்றி அவர்களின் நன்மதிப்பைப் பெற்று உள்ளது. மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து ஆண்டு விழாவை கொண்டாடினோம்.தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்ட கிளைகளை தொடங்க உள்ளோம்.

மேலும் கர்நாடகா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டு வருகிறது.இந்த மையத்தில் ஆரோ வாட்டர் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு தான் கார்கள் கழுவப்படுகிறது.ஆர்கானிக் போம் என்ற தொழில்நுட்பம் மூலம் கார்கள் கழுவப்படுவதால், துருப்பிடிக்காமல் இருக்கும்.பல ஆண்டுகள் புதிது போன்ற தோற்றத்துடன் இருக்கும். இதேபோல் யு.வி ப்ரொடக்சன், கிளாஸ் பாலீஸ் உள்ளிட்ட சேவைகள் ஜெர்மன் தொழில்நுட்ப கருவிகள் மூலம் செய்யப்படுகிறது.

குறைந்த கட்டணத்தில், வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் சேவைகளைப் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. என்றார்.

பேட்டியின்போது துடியலூர் 5 கே கார் ஷோரும் உரிமையாளர் ஜெகன்,கிளையின் மேலாளர் கவுதம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க