March 20, 2020
தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை எனவும் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் பாயும் என காவல்துறை டி.ஜி.பி திரிபாதி எச்சரித்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 195 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் வரவு வருகிறது.
இந்த நிலையில், கொரானா வைரஸ் தொடர்பாக¸ தமிழகத்தில் 144 தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை எனவும் வதந்திகள் பரப்புகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்