• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 13 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

May 20, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 557 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து,மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம், இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,882 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 7,219 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று 11,441 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,793 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க