• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி

August 5, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க முதல்வர் பழனிசாமி அனுமதி
வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன. இதையடுத்து, தளர்வுகளுடன் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர் சங்கத்தினர் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடங்களை திறக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி ஏற்று ஆணை பிறப்பதித்துள்ளார்.

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5ந்தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள், 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும்.
அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க