February 5, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
6 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாதத்துக்குள் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.மேலும்,மணல் குவாரி தடையால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.