March 6, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கூறிவரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அவர் இன்று தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில்,திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ள எச்.ராஜா, லெனின் யார் என்றும் அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதைப்போல், திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்றும் எச்.ராஜா கூறியுள்ளார்.
இதனிடையே ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.