August 18, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல்
9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி, 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும்.6 அடி இடைவெளி கட்டாயம்; சூழலுக்கேற்ப திறந்தவெளியில் வகுப்புகளை நடத்தலாம். வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்.
அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை குறிப்பிடப்பட்டுள்ளது.