• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்திய அரசு பணிந்துவிட வேண்டாம் – சித்தராமய்யா

April 5, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்திய அரசு பணிந்துவிட வேண்டாம் என கார்நாடக முதல்வர் சித்தராமய்யா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடித்தி வருகின்றனர்.இந்நிலையில்,இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அப்போது,மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கடிதம் எழுதி உள்ளார்.

அதில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக அரசின் அழுத்தத்திற்கு மத்திய அரசு பணிய வேண்டாம்.உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்திய அரசு பணிந்துவிட வேண்டாம்.நதிநீர் பங்கீட்டிற்கு என ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது எனக் கூறியுள்ளார்.

 

 

மேலும் படிக்க